சிந்தனை! செயல்!! சாதனை!!!
வாழ்க்கையில் ஒரு கருத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த
ஒரு கருத்தினையே வாழ்க்கையாக்குங்கள்.உங்களுடைய கனவிலும்
நினைவிலும் அதற்கு உருவங் கொடுங்கள். உங்கள் உடலின் நாடி நரம்புகளில் அக்கருத்தின் நாதம் ஒலிக்கட்டும்.வாழ்வில் வெற்றிக்கு
இதுதான் வழி. உங்கள் வாழ்வில் எண்ணியதை எண்ணியவாறு எய்த
முடியும். எப்படி?எண்ணியதை நிச்சயம் நிறைவேற்ற முடியும் என்ற
மன உறுதியும்,வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற தணியா வேட்கையும் உங்களுக்கு வேண்டும்.."நீ எதை நினைக்கிறாயோ அது ஆவாய்"என்கின்றன உலகிலுள்ள எல்லா மறை நூல்களும்."நம்பினார் கெடுவதில்லை"இது நான்கு மறை தீர்ப்பு!
பல திறமைகள் இருந்தும்,வசதியான சூழ்நிலை இருந்தும்,வாழ்வில் ஒரு சிலரால்தான் அவர்கள் நினைத்தபடி வெற்றி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடிகிறது.பலர் ஏனோ தானோ என்ற உப்பு சப்பற்ற வாழ்க்கையைத்தான் வாழ முடிகிறது.இது ஏன்?என்ற கேள்வி
உங்கள் மனதில் பலமுறை தோன்றியிருக்கும்.
"உம்...'நாம் கொடுத்து வைத்தது இவ்வளவு தான்!'
"அதுக்கெல்லாம் ஒரு சுழி வேணும்பா!"-
"எல்லாம் நம் தலை விதிப்படிதான் நடக்கிறது!"
இவ்வாறான சலிப்புக்களையும்,பேச்சுக்களையும்,ஏக்கப் பெருமூச்சுக்களையும், சமாதான மொழிகளையும், உங்களுடைய நண்பர்களிடமிருந்தோ,தொடர்பில்லாத மூன்றாவது நபரிடமிருந்தோ
நீங்கள் கேட்டிருப்பீகள்!இத்தகைய பேச்சுக்களையும் செயல்களையும் அன்றாடம் நீங்கள் கேட்கும் போதும்,காணும் போதும் உங்கள் உள்ளத்தில் பலவீனம் குடிபுகுந்து நம்பிக்கையை வெளியே விரட்டி விடுகிறது.
நான்கு எழுத்து மந்திரம்!
விரியும்....
வாழ்க்கையில் ஒரு கருத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த
ஒரு கருத்தினையே வாழ்க்கையாக்குங்கள்.உங்களுடைய கனவிலும்
நினைவிலும் அதற்கு உருவங் கொடுங்கள். உங்கள் உடலின் நாடி நரம்புகளில் அக்கருத்தின் நாதம் ஒலிக்கட்டும்.வாழ்வில் வெற்றிக்கு
இதுதான் வழி. உங்கள் வாழ்வில் எண்ணியதை எண்ணியவாறு எய்த
முடியும். எப்படி?எண்ணியதை நிச்சயம் நிறைவேற்ற முடியும் என்ற
மன உறுதியும்,வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற தணியா வேட்கையும் உங்களுக்கு வேண்டும்.."நீ எதை நினைக்கிறாயோ அது ஆவாய்"என்கின்றன உலகிலுள்ள எல்லா மறை நூல்களும்."நம்பினார் கெடுவதில்லை"இது நான்கு மறை தீர்ப்பு!
பல திறமைகள் இருந்தும்,வசதியான சூழ்நிலை இருந்தும்,வாழ்வில் ஒரு சிலரால்தான் அவர்கள் நினைத்தபடி வெற்றி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடிகிறது.பலர் ஏனோ தானோ என்ற உப்பு சப்பற்ற வாழ்க்கையைத்தான் வாழ முடிகிறது.இது ஏன்?என்ற கேள்வி
உங்கள் மனதில் பலமுறை தோன்றியிருக்கும்.
"உம்...'நாம் கொடுத்து வைத்தது இவ்வளவு தான்!'
"அதுக்கெல்லாம் ஒரு சுழி வேணும்பா!"-
"எல்லாம் நம் தலை விதிப்படிதான் நடக்கிறது!"
இவ்வாறான சலிப்புக்களையும்,பேச்சுக்களையும்,ஏக்கப் பெருமூச்சுக்களையும், சமாதான மொழிகளையும், உங்களுடைய நண்பர்களிடமிருந்தோ,தொடர்பில்லாத மூன்றாவது நபரிடமிருந்தோ
நான்கு எழுத்து மந்திரம்!
விரியும்....
No comments:
Post a Comment