தமிழகத் தலைநகரின் பிரதான சாலை அது.சிவப்பு விளக்கு விழுந்தவுடன் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நிற்க்கின்றன.எல்லாருக்கும் ஏதோ ஒரு அவசரம் இருக்கிறது.ஒரு பக்கம் சுட்டெரிக்கும் வெயில்.சிக்னல் விளக்கில் 40,39,38 என வினாடிகள் எண்ணிக்கை குறைவதை எல்லோரும் ஆர்வமாக பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
கல்லூரிகளில் பேசச் சொல்கிறபோது,பெரிய மனிதர்கள் இருக்கிற மேடைகளில் அமர வாய்ப்பு கிடைக்கிறபோது ஆச்சரியமான சில மனிதர்களை கவனிப்பேன்.அமைதியாய் இருப்பார்கள்.அருகில் வந்து பவ்யமாக ஒருவர் ஏதொ சொல்வார்.அதனை கவனித்துக் கேட்பார்கள்.அதிர்ந்து கூட பேச மாட்டார்கள்...மறுக்காமல் செய்வார்கள்.